நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
மண் சுமந்தவா - பாதி
மதி சுமந்தவா
பெண் சுமந்தவா - பொங்கும்
புனல் சுமந்தவா
கண் சிவந்தவா - நெற்றிக்
கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம்
இறக்கி வைக்க வா . (நமசிவாய ஓம் )
ஆலம் உண்டவா - நல்ல
அரவம் பூண்டவா
சூலம் கொண்டவா - நெற்றிச்
சுடரைக் காட்டவா
கோலம் காட்டவா - என்னில்
குடி புகுந்தவா
நீல கண்டனே - நெஞ்சில்
நேசம் கொண்டு வா . (நமசிவாய ஓம் )
பித்தன் ஆனவா - சக்திப்
பிரியன் ஆனவா
அத்தன் ஆனவா - என்னை
அடிமையாக்க வா
சத்தம் ஆனவா - அதன்
சரணம் ஆனவா
நித்தம் பாடினேன் - கேட்டு
நீயும் ஓடி வா . (நமசிவாய ஓம் )
.
தோடணிந்தவா - புலித்
தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன்
அழகைக் காட்ட வா
பாடல் கேட்டு வா - எந்தன்
பக்திபார்த்து வா
கூடல் ஆண்டவா - எந்தன்
குரலைக் கேட்டுவா . (நமசிவாய ஓம் )
இடப வாகனா - தமிழ்
இசையின் மோகனா
நடன ஈஸ்வரா - ப்ரணவ
நாத சங்கரா
சுடலைக் காத்தவா - உயிர்
சுருதி சேர்த்தவா
கடவூர் ஆண்டவா - என்
கவலை போக்க வா . (நமசிவாய ஓம் )
அம்மை ஆனவா - எங்கள்
அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
ஜன்மம் காக்க வா . (நமசிவாய ஓம் )
கோட்கள் ஆள்பவா - அவை
கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
ஆண்டு கொள்ளவா . (நமசிவாய ஓம் )
காற்றைப் படைத்தவா - மூலக்
கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
கூட்டிக் கொள்ளவா . (நமசிவாய ஓம் )
ஆதியானவா - வாழ்வின்
அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
விதியை மாற்ற வா (நமசிவாய ஓம் )
அகில மானவா - அணுவின்
அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
சக்தியோடு வா (நமசிவாய ஓம் )
வாய்மை யானவா - அதன்
வலிமை யானவா
தூய்மை யானவா - உன்னைத்
தொடரச் செய்தவா
நேய மானவா - எந்தன்
நெஞ்சில் நின்றவா
தாயு மானவா - என்னைத்
தாங்கிக் கொள்ள வா (நமசிவாய ஓம் )
தாளம் ஆனவா - இசைத்
தமிழும் ஆனவா
நாளம் நிறைந்தவா - எந்தன்
நரம்பில் உறைந்தவா
ஓலம் கேட்டு வா- எந்தன்
உளறல் கேட்க வா
காளத்தி நாதா - எந்தன்
கானம் கேட்க வா (நமசிவாய ஓம் )
விறகு விற்றவா - கை
வளையல் விற்றவா
மறைகள் கற்றவா - மன்
மதனைச் செற்றவா
கறைகள் அற்றவா - ஒரு
களங்கம் அற்றவா
பிறவி அற்றவா - என்னைப்
பிடித்துப் பற்ற வா (நமசிவாய ஓம் )
முக்கண் பெற்றவா - வேல்
முருகைப் பெற்றவா
தக்கன் மருமகா - அவன்
தலையைக் கொய்தவா
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச்
சொந்த மாக்க வா (நமசிவாய ஓம் )
பரியை அழைத்தவா - பாண்டி
படையில் நுழைத்தவா
நரியை அடைத்தவா - வைகை
நதியை உடைத்தவா
புரிய வைத்தவா - உன்னைப்
புகழ வைத்தவா
அரியின் மைத்துனா - என்னை
அருகில் சேர்க்கவா (நமசிவாய ஓம் )
உமையின் காதலா - அகில
உலக நாயகா
சுமைகள் நீக்க வா - எந்தன்
சுயத்தைக் காக்க வா
சமயம் காத்தவா - தமிழ்ச்
சங்கம் வளர்த்தவா
இமயம் உறைபவா - எந்தன்
இதயம் நிறைய வா (நமசிவாய ஓம் )
தில்லை ஆண்டவா - பெருந்
துறையூர் ஆண்டவா
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
நல்லூர் ஆண்டவா
தொல்லை நீக்கவா - வாட்டும்
துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை
அணைத்துக் கொள்ள வா (நமசிவாய ஓம் )
அருணை ஆண்டவா - திரு
ஆரூர் ஆண்டவா
கருணை காட்ட வா - மனக்
கலக்கம் ஓட்ட வா
இருளைப் போக்க வா - வாழ்வில்
இனிமை சேர்க்க வா
அருளைக் கூட்ட வா - தேவ
அமுதம் ஊட்ட வா (நமசிவாய ஓம் )
கயிலை ஆண்டவா - புனிதக்
காசி ஆண்டவா
மயிலை ஆண்டவா - பாண்டி
மதுரை ஆண்டவா
உயிலை எழுதவா - அதில்
உயிரை எழுதவா
துயில் எழுந்துவா - எந்தன்
துயரம் தீர்க்க வா (நமசிவாய ஓம் )
கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
கறி சமைக்க வா
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
பாதம் தீண்டவா
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
வீண் தானல்லவா
என்னைத் தோண்டினேன் - வருக
ருத்ர தாண்டவா (நமசிவாய ஓம் )
பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
அரவம் பூண்டவா
சூலம் கொண்டவா - நெற்றிச்
சுடரைக் காட்டவா
கோலம் காட்டவா - என்னில்
குடி புகுந்தவா
நீல கண்டனே - நெஞ்சில்
நேசம் கொண்டு வா . (நமசிவாய ஓம் )
பித்தன் ஆனவா - சக்திப்
பிரியன் ஆனவா
அத்தன் ஆனவா - என்னை
அடிமையாக்க வா
சத்தம் ஆனவா - அதன்
சரணம் ஆனவா
நித்தம் பாடினேன் - கேட்டு
நீயும் ஓடி வா . (நமசிவாய ஓம் )
.
தோடணிந்தவா - புலித்
தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன்
அழகைக் காட்ட வா
பாடல் கேட்டு வா - எந்தன்
பக்திபார்த்து வா
கூடல் ஆண்டவா - எந்தன்
குரலைக் கேட்டுவா . (நமசிவாய ஓம் )
இடப வாகனா - தமிழ்
இசையின் மோகனா
நடன ஈஸ்வரா - ப்ரணவ
நாத சங்கரா
சுடலைக் காத்தவா - உயிர்
சுருதி சேர்த்தவா
கடவூர் ஆண்டவா - என்
கவலை போக்க வா . (நமசிவாய ஓம் )
அம்மை ஆனவா - எங்கள்
அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
ஜன்மம் காக்க வா . (நமசிவாய ஓம் )
கோட்கள் ஆள்பவா - அவை
கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
ஆண்டு கொள்ளவா . (நமசிவாய ஓம் )
காற்றைப் படைத்தவா - மூலக்
கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
கூட்டிக் கொள்ளவா . (நமசிவாய ஓம் )
ஆதியானவா - வாழ்வின்
அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
விதியை மாற்ற வா (நமசிவாய ஓம் )
அகில மானவா - அணுவின்
அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
சக்தியோடு வா (நமசிவாய ஓம் )
வாய்மை யானவா - அதன்
வலிமை யானவா
தூய்மை யானவா - உன்னைத்
தொடரச் செய்தவா
நேய மானவா - எந்தன்
நெஞ்சில் நின்றவா
தாயு மானவா - என்னைத்
தாங்கிக் கொள்ள வா (நமசிவாய ஓம் )
தாளம் ஆனவா - இசைத்
தமிழும் ஆனவா
நாளம் நிறைந்தவா - எந்தன்
நரம்பில் உறைந்தவா
ஓலம் கேட்டு வா- எந்தன்
உளறல் கேட்க வா
காளத்தி நாதா - எந்தன்
கானம் கேட்க வா (நமசிவாய ஓம் )
விறகு விற்றவா - கை
வளையல் விற்றவா
மறைகள் கற்றவா - மன்
மதனைச் செற்றவா
கறைகள் அற்றவா - ஒரு
களங்கம் அற்றவா
பிறவி அற்றவா - என்னைப்
பிடித்துப் பற்ற வா (நமசிவாய ஓம் )
முக்கண் பெற்றவா - வேல்
முருகைப் பெற்றவா
தக்கன் மருமகா - அவன்
தலையைக் கொய்தவா
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச்
சொந்த மாக்க வா (நமசிவாய ஓம் )
பரியை அழைத்தவா - பாண்டி
படையில் நுழைத்தவா
நரியை அடைத்தவா - வைகை
நதியை உடைத்தவா
புரிய வைத்தவா - உன்னைப்
புகழ வைத்தவா
அரியின் மைத்துனா - என்னை
அருகில் சேர்க்கவா (நமசிவாய ஓம் )
உமையின் காதலா - அகில
உலக நாயகா
சுமைகள் நீக்க வா - எந்தன்
சுயத்தைக் காக்க வா
சமயம் காத்தவா - தமிழ்ச்
சங்கம் வளர்த்தவா
இமயம் உறைபவா - எந்தன்
இதயம் நிறைய வா (நமசிவாய ஓம் )
தில்லை ஆண்டவா - பெருந்
துறையூர் ஆண்டவா
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
நல்லூர் ஆண்டவா
தொல்லை நீக்கவா - வாட்டும்
துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை
அணைத்துக் கொள்ள வா (நமசிவாய ஓம் )
அருணை ஆண்டவா - திரு
ஆரூர் ஆண்டவா
கருணை காட்ட வா - மனக்
கலக்கம் ஓட்ட வா
இருளைப் போக்க வா - வாழ்வில்
இனிமை சேர்க்க வா
அருளைக் கூட்ட வா - தேவ
அமுதம் ஊட்ட வா (நமசிவாய ஓம் )
கயிலை ஆண்டவா - புனிதக்
காசி ஆண்டவா
மயிலை ஆண்டவா - பாண்டி
மதுரை ஆண்டவா
உயிலை எழுதவா - அதில்
உயிரை எழுதவா
துயில் எழுந்துவா - எந்தன்
துயரம் தீர்க்க வா (நமசிவாய ஓம் )
கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
கறி சமைக்க வா
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
பாதம் தீண்டவா
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
வீண் தானல்லவா
என்னைத் தோண்டினேன் - வருக
ருத்ர தாண்டவா (நமசிவாய ஓம் )
பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
(சிவகுமாரன் கவிதைகளில் ஏற்கெனவே இடுகையிடப்பட்டது. )
12 comments:
ஒவ்வொரு அடியும் அரனின் ஒரு கதையை தன்னுள் அடக்கி இருக்கிறது. அவனது பெருமைகளை சாற்றியே கவிதை புனையும் விதம் மிக நேர்த்தி. வாழ்க வளமுடன்.
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..
மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..
மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..
மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..
மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
நமசிவாய ஓம்
பாட்லை இனிமையாய் கேட்டுக்கொண்டே படிக்கும் போது அரனின் தாண்டவம் மனம் நிறைந்து அருள்புரிகிறது..
மிகச்சிறப்பான ஆக்கம்..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
excellant composition accompanied by nice music!thanks fr both!
படமும் பெரிது;பாடலும் பெரிது
வார்த்தைகள் எங்கிருந்து தான் பிரவாகமெடுக்கிறதோ....ஆச்சர்யம்... அருமை வாழ்த்துக்கள்!
அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..
ஹரிவராசனம் ' மெட்டில் அமைந்த இனிய பக்திப் பாடல் &
குரல் பதிவு மிகவும் அருமை. அசர வைத்தது.
சொற்கள் சுந்தரத் தாண்டவம் ஆடுகின்றன !
எளிய நடையில் உள்ள தங்கள் பாடல் அருமை. அதை இனிமையாகப் பாடிய தங்கள் இளவல் திரு பிரபாகரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
உங்கள் அருட்கவி என்னையும் கவிதை எழுதத்தூண்டுகிறது.
மதனை எரித்தவா-என்
மனத்தில் நிறைந்தவா
மதியை தரித்தவா -வில்வ
மலர்கள் அணிந்தவா
நதியைத் தடுத்தவா -ஊழி
நடனம் புரிபவா
விதியைத் தகர்க்கவா-என்
வினைகள் அழிய வா !
Post a Comment