Tuesday, October 22, 2019

பரம்பொருளே

                                    வெண்பா 

நாடோடி வாழ்க்கையில் நானெங்கு போனாலும்
ஓடோடி வந்துநிற்கும் உன்னருளே  - ஈடேதும்
இல்லா பரம்பொருளே ! என்பயணம் சீராக்கி
நல்வழியில் என்னை நடத்து.
                                           
                                 சிவகுமாரன்.

Wednesday, October 9, 2019

லிங்கராஜா

         
                                     வெண்பா

திரிபுவ னேஸ்வரா லிங்கராஜா
உந்தன்
தரிசனம் காணத் தவித்தோம் - பரிவாய்
அழைத்தாய் உனதருள் ஆலயம், வாழ்வைத்
தழைத்திடச் செய்யுமுன் தாள்.

                                  -சிவகுமாரன்


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் லிங்கராஜா ஆலயம். திரிபுவனேஸ்வர்  என்றும் ஈசன் அழைக்கப் படுகிறார். மூவுலகங்களுக்கும் அதிபதி. 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கினேன்.