Sunday, January 24, 2016
Monday, January 18, 2016
அழகன் முருகன்
(வழிநடைப் பாடல்)
அரோகரா ஓம் அரோகரா
அழகன் முருகன் அரோகரா
அரோகரா வேல் அரோகரா
அறுபடை முருகன் அரோகரா
பழனியில் முருகன் படைவீடு - அங்கு
பாதங்கள் தேய நடைபோடு
அழகன் முருகன் அருள்தேடு - அவன்
அடிதொழ மறந்தால் வரும்கேடு . (அரோகரா)
கவலைகள் இருந்தால் தள்ளிப்போடு- அதை
கந்தனவன் காலடியில் அள்ளிப்போடு !
அவனிடம் துயரங்கள் சொல்லிப்போடு - அவன்
அருள்மழை பொழிவான் துள்ளி ஆடு ! (அரோகரா)
காவடி தூக்கி மலையேறு -அவன்
காலடி பணிந்து மனம் ஆறு
பாவங்கள் தீர்த்திட வருமாறு -அந்தப்
பாலனை அழைத்து உன் குறை கூறு! (அரோகரா)
சரவணப் பொய்கையில் நீராடு - உன்
சங்கடம் கழியும் நீரோடு !வரங்களைத் தரச்சொல்லு சீரோடு - அதை
வடிவேலன் தரும்வரை போராடு! (அரோகரா)
கந்தனுக்கு முகங்கள் ஓராறு - நம்மைக்
காத்திடும் கரங்கள் ஈராறு !
செந்தில்வேலன் பேரைச் சொன்னால் சுகம் நூறு -இது
சித்தரெல்லாம் கண்டு சொன்ன வரலாறு (அரோகரா)
தண்டபாணி ஏறிவரும் தங்கத்தேரு - அது
தகதக வெனவே மின்னும் பாரு
கண்டுகொள்ள வேணுமடா கண்கள் நூறு - அதைக்
கண்ட பின்னே கவலைகள் ஓடும் பாரு! (அரோகரா)
பாடலை பாடியிருப்பது : பிரபு & சுற்றத்தார்
இசை : செல்வன்
Subscribe to:
Posts (Atom)