Tuesday, October 22, 2019

பரம்பொருளே

                                    வெண்பா 

நாடோடி வாழ்க்கையில் நானெங்கு போனாலும்
ஓடோடி வந்துநிற்கும் உன்னருளே  - ஈடேதும்
இல்லா பரம்பொருளே ! என்பயணம் சீராக்கி
நல்வழியில் என்னை நடத்து.
                                           
                                 சிவகுமாரன்.

3 comments:

சிவகுமாரன் said...

ஓடிக்கொண்டே யிருக்கிறேன். நேற்று உகாண்டா, இன்று ஆந்திரா, நாளை கர்நாடகா.
அவனருள் இருக்கும் வரை யாதும் ஊரே யாவரும் கேளிர்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் சிறப்புற அடியேனின் வாழ்த்துகள்...

Nanjil Siva said...

பொருள் தேடி ஓடுவதும்
அவனருள் தேடி நாடுவதும் - கவி
பதம் தேடி பாடுவதும் இறை சித்தமே
அன்றி வேறென்ன பராபரமே !!!
>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<