குருவான தந்தைக்கே வேதத்தின் பொருள்சொல்லி
குருவான குமரேசனே
குறை செய்த பிரம்மனைக் கோபித்து சிறையிட்ட
குறும்பான குமரேசனே
அருள்பெற்ற பிள்ளையாய் அன்னையின் வேல்கொண்டு
அதம் செய்த குமரேசனே
அகந்தன்னில் குடியேறி அகலாது ஆட்கொண்டு
அரசாளும் குமரேசனே
தெருவெங்கும் விளையாடும் சிறுபிள்ளை முகமெல்லாம்
உனைக்கண்டேன் குமரேசனே
திசைதோறும் தினந்தோறும் தேடியே திரிகிறேன்
தெளிவாக்கு குமரேசனே
கருவோடு உருவாகி கண்ணுக்குள் நிலவாகி
கலந்திட்ட குமரேசனே
கடலோடு விளையாடி கரைசேர்க்கும் செந்தூரின்
குருவான குமரேசனே
குறை செய்த பிரம்மனைக் கோபித்து சிறையிட்ட
குறும்பான குமரேசனே
அருள்பெற்ற பிள்ளையாய் அன்னையின் வேல்கொண்டு
அதம் செய்த குமரேசனே
அகந்தன்னில் குடியேறி அகலாது ஆட்கொண்டு
அரசாளும் குமரேசனே
தெருவெங்கும் விளையாடும் சிறுபிள்ளை முகமெல்லாம்
உனைக்கண்டேன் குமரேசனே
திசைதோறும் தினந்தோறும் தேடியே திரிகிறேன்
தெளிவாக்கு குமரேசனே
கருவோடு உருவாகி கண்ணுக்குள் நிலவாகி
கலந்திட்ட குமரேசனே
கடலோடு விளையாடி கரைசேர்க்கும் செந்தூரின்
கடவுளே குமரேசனே
விண்ணிலும் மண்ணிலும் வெறிகொண்டு உனைத்தேடி
வெம்பினேன் குமரேசனே
வேடிக்கை காட்டாமல் வேதனை போக்கவே
விழிகாட்டு குமரேசனே
மண்ணிலே தாய்க்கெலாம் மகனாகப் பிறந்தெங்கள்
மனதாளும் குமரேசனே
மடிமீது தவழ்கின்ற மழலையின் மொழியாகி
மயக்கிடும் குமரேசனே
தண்ணீரில் தாமரை இலைபோல ஒட்டாமல்
தவிக்கின்றேன் குமரேசனே
தள்ளாடும் நேரத்தில் தடுமாற்றம் வாராமல்
தாங்குவாய் குமரேசனே
கண்ணீரின் உப்புக்கள் கடலோடு கரைந்தோட
கரைசேர்ப்பாய் குமரேசனே
கடலோடு விளையாடி கரைசேர்க்கும் செந்தூரின்
கடவுளே குமரேசனே