Wednesday, January 9, 2013

வா!

( வெண்பா )



கல்லானை தின்னக்  கரும்பினைத் தந்தவா
சொல்லாட மாமதுரை வந்தவா -இல்லாமை 
இல்லாமல் போக்கவா, என்துயர் நீக்கவா
வல்லபச் சித்தனே வா

சிவகுமாரன் 

2 comments:

G.M Balasubramaniam said...


இறைவனைத் துதித்துப் பாடும்போது அவனுடைய திருவிளையாடல்கள் இடம் பெறுவது இயல்புதான் என்றாலும் என்னைப் போல் கல்லாதான் எல்லாக் கதைகளும் கேட்காதான் ஆதலால்..... ..... கவிதையின் மூர்த்தி சிறிதாயிருந்தாலும் கீர்த்தி பெரிதாய்த்தான் இருக்கவேண்டும். வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

ஆகா!