Friday, January 26, 2024

கோணேஸ்வரா


  வெண்பா 

(அய்யனைத் தரிசிக்கும் வரை )

கோணேஸ் வராஉந்தன் கோல எழில்தன்னைக் 

காணேனோ என்னிருக் கண்களால் ? - வீணே 

பிழைத்துக் கிடக்கின்றேன் , பெற்றவா என்னை 

அழைத்துக் கொடுப்பாய் அருள். 


 (அய்யனைத்  தரிசித்த பின் ) 

கோணமலை ஈஸ்வரனின் கோல எழில்தன்னைக் 

காணவந்தேன் , பேரருளில் கட்டுண்டேன் - வீணடைந்து 

போகாதென் வாழ்க்கை ! பொலிந்திடச்  செய்திடுவான் !

ஆகா அவனே அரன் (ண் ).

-சிவகுமாரன்.

25.01.2024

@ திருகோணமலை 


 

No comments: