Monday, April 26, 2021

வள்ளலார் போற்றி

 



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


வடலூர் ஈன்ற வள்ளல் குணமே

   வாடிய பயிர்கண்டு வாடிய மனமே

கடவுளை ஜோதியில் காட்டிய குருவே

 கடவுளாய் ஜோதியில் கலந்திட்ட உருவே

மடமையைச் சாடிய மாபெரும் துணிவே

   மனதினைச் செம்மையாய் மாற்றிய கனிவே.

அடங்கா  எண்ணங்கள் அடக்கிட வருவாய்.

   அருட்பெருஞ் சோதியாய் அகத்தினில் மலர்வாய்.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


குரு வணக்கம் பாடியிருப்பவர் தம்பி பிரபாகரன். 



                                                                                                                              சிவகுமாரன் 

No comments: