நாராயணா நமோ நாராயணா
நாராயணா நமோ நாராயணா
ஆரா அமுதே நாராயணா
அழகிய கண்ணா நாராயணா
தீரா வினைகளைத் தீராய் கண்ணா
திருமகள் துணையுடன் வாராய் கண்ணா
(நாராயணா) 1
மண் அள்ளித் தின்றாய் நாராயணா
மாபலி கொன்றாய் நாராயணா
கண்மணி ராதையின் காதல் மன்னா
கனிவுடன் என்முகம் பாராய் கண்ணா
(நாராயணா) 2
வாமனன் உருக்கொண்டாய் நாராயணா
வான்புவி அளந்தாய் நாராயணா
இராமனாய் வந்தாய் நாராயணா
தாமதமின்றி வாராய் கண்ணா
(நாராயணா) 3
ஸ்ரீலங்கா வென்றாய் நாராயணா
சீதையை மீட்டாய் நாராயணா
ஸ்ரீரங்க நாதா நாராயணா
ஸ்ரீதேவி அருள்தரச் சொல்வாய் கண்ணா
(நாராயணா ) 4
இராவணன் அழித்தாய் நாராயணா
இரணியனைப் பிளந்தாய் நாராயணா
வராகமாய் வந்தாய் நாராயணா
வளம்பெற வரம்தா நாராயணா
(நாராயணா) 5
கிருஷ்ணராய் வந்தாய் நாராயணா
கீதையை தந்தாய் நாராயணா
அருச்சுனன சாரதி நாராயணா
அகத்தேர் ஏறிடு நாராயணா
(நாராயணா) 6
பரசுராம் ஆனவா நாராயணா
பலராம் ஆனவா நாராயணா
நரசிம்மம் ஆனவா நாராயணா
நலம்தர வருவாய் நாராயணா
(நாராயணா)7
தூணாய் இருந்தாய் நாராயணா
துரும்பிலும் இருப்பாய் நாராயணா
மீனாய் பிறந்தாய் நாராயணா
மீண்டும் வருவாய் நாராயணா
(நாராயணா)8
கூர்மமாய் வந்தாய் நாராயணா
கோகுல வாசா நாராயணா
கார்முகில் வண்ணா நாராயணா
கல்கியாய் வருவாய் நாராயணா
(நாராயணா)9
தூணாய் இருந்தாய் நாராயணா
துரும்பிலும் இருப்பாய் நாராயணா
மீனாய் பிறந்தாய் நாராயணா
மீண்டும் வருவாய் நாராயணா
(நாராயணா)8
கூர்மமாய் வந்தாய் நாராயணா
கோகுல வாசா நாராயணா
கார்முகில் வண்ணா நாராயணா
கல்கியாய் வருவாய் நாராயணா
(நாராயணா)9
ஆண்டாள் மாலையை ஏற்றாய் கண்ணா
ஆழ்வார் திருமொழி கேட்டாய் கண்ணா
பாண்டவர் துயரங்கள் தீர்த்தாய் கண்ணா
பாமரன் துயரங்கள் தீர்ப்பாய் கண்ணா
(நாராயணா)10
வேங்கட நாதா நாராயணா
வேலவன் மாமா நாராயணா
தாங்கிட வருவாய் நாராயணா
தாள்மலர் பணிந்தோம் நாராயணா
(நாராயணா)11
சங்கேந்தும் ஆண்டவா நாராயணா
சக்கரம் பூண்டவா நாராயணா
எங்கேயும் இருப்பாய் நாராயணா
என்னுள்ளும் இருப்பாய் நாராயணா
(நாராயணா)12
பாற்கடல் வாசா நாராயணா
பாம்பணை கொண்டவா நாராயணா
ஏற்கவா என்கவி நாராயணா
என்துயர் போக்கவா நாராயணா
(நாராயணா)13
கோதண்ட ராமா நாராயணா
கோபாலா வைகுந்தா நாராயணா
பாதங்கள் பணிந்தேன் நாராயணா
பாவங்கள் அழிப்பாய் நாராயணா
(நாராயணா)14
மாதவா ஸ்ரீதரா நாராயணா
மாலவா ராகவா நாராயணா
ஆதர வளிப்பாய் நாராயணா
அருள்மழை பொழிவாய் நாராயணா
(நாராயணா)15